இடர் களையும் பதிகம்| மறையுடையாய் தோலுடையாய் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல்கள் | Sivan Songs
Emusic Abirami Emusic Abirami
1.19M subscribers
465,829 views
0

 Published On Dec 30, 2018

ஓம் நமச்சிவாய.. திருச்சிற்றம்பலம்

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் பலன் தரும் பதிகங்கள் வரிசையில் "மறையுடையா தோலுடையாய்" பதிக பாடல்களை கேட்டு பயனடையுங்கள்..

இது துன்பம் நீக்கி இன்பம் அருளும் பதிகம் ஆகும்.

இப்பதிகத்தை ஓதுவதால் இறையருள் எளிதில் கிட்டும்
இறையருள் ஒன்றிருந்தால் மற்றவை எல்லாம் தானாக கைகூடும்.
இறையருளால் சூரியனைக் கண்ட பனி போலல நமது துன்பங்கள் எல்லாம் அழிந்து இன்பம் பெருகும்.

தினமும் இப்பதிகத்தை ஓதுதல் நம் அனைவரின் கடமையாகும்.
வீட்டில் அமைதியும் மங்கலமும் ஏற்படும்.


ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்

"மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே"

திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள் வாயாக

-----திருஞானசம்பந்தர்

பாடியவர்: வீரமணி கண்ணன்
இசை: வீரமணி கண்ணன்

Singer: Veeramani Kannan
Music: Veeramani Kannan



Click here to Playlist: https://www.youtube.com/watch?v=i_0JW...

Website: http://www.abiramionline.com

Subscribe here: https://goo.gl/nCrwZM

show more

Share/Embed