Published On May 17, 2019
"வெப்பதின் தாக்கம் குறையவும், வறட்சி நீங்கவும் மழை வேண்டி இறைவனிடம் பிராத்திப்போம்...!"
"#வையம்_நீடுக #மாமழை #மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான் தழைத்தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே."
#இறைவர்_திருப்பெயர் : ஸ்ரீ வீரட்டேஸ்வரர், ஸ்ரீ தக்ஷபுரீஸ்வரர்
#இறைவியார்_திருப்பெயர் : ஸ்ரீ இளங்கொம்பனையாள், ஸ்ரீ வாலாம்பாள்
#திருமுறை : முதல் திருமுறை 134 வது திருப்பதிகம்
#அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க"
நாட்டில் மழை வளம் குறைந்து வறட்சி காணப்படும் போது. #மேகராகக்_குறிஞ்சி ராகத்தைப் பாடினால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதிலும் ஞானக்குழந்தை திருஞானசம்பந்தர் இயற்றிய இந்தப் பாடலைத் தினமும் பாடி வருவோம். மழை வளம் பெருக, மண் வளம் செழிக்க இது உதவும். மொத்தத்தில் ஞானசம்பந்த சுவாமிகள் இந்த ராகத்தில் ஏழு பாடல்களைப் பாடியிருக்கிறார். அவை #திருவையாறு, #கழுமலம்(சீர்காழி), #திருவீழிமிழலை, #திருமுதுகுன்றம், #திருப்பறியலூர், #திருக்கச்சியேகம்பம் ஆகிய தலங்களில் பாடப்பட்டவை. மனித யத்தனத்தால் முடியாத காரியத்தை தெய்வ அனுக்கிரகம் தான் செய்து தரவேண்டும். தெய்வத்தை நம்புவோம். இந்தத் தேவாரப் பாடலை தினமும் பாடி வருவோம். கருணை பிறக்கும்.
மழை வேண்டல் திருப்பதிகம் 01 #திருக்கச்சியேகம்பம்
• 01.133 திருக்கச்சியேகம்பம் | வெந்தவெண...
மழை வேண்டல் திருப்பதிகம் 02 #திருப்பறியலூர்
• மழை வேண்டல் திருப்பதிகம் 02 திருப்பற...
மழை வேண்டல் திருப்பதிகம் 03 #திருமுதுகுன்றம்
• Video
மழை வேண்டல் திருப்பதிகம் 04 #திருவீழிமிழலை
• மழை வேண்டல் திருப்பதிகம் 04 திருவீழி...
மழை வேண்டல் திருப்பதிகம் 05 #திருவையாறு
• 01.130 திருவையாறு | புலனைந்தும் பொறிக...
மழை வேண்டல் திருப்பதிகம் 06 #திருக்கழுமலம்
• 01.129 திருக்கழுமலம்(சீர்காழி) | சேவு...
மழை வேண்டல் திருப்பதிகம் 07 #திருப்பராய்த்துறை
• 01.135 திருப்பராய்த்துறை | நீறு சேர்வ...
#தொகுப்பு : ஸ்ரீ தில்லை இளந்தென்றல்