Published On May 15, 2020
விநாயகர் அகவல், ஔவையாரால் எழுதப்பட்ட மிகச்சிறந்த ஆன்மீகப் பாடல். காரியத் தடைகளை நீக்கவல்ல விக்னேசுவரனான விநாயகர் மீது பாடப்பெற்ற ஈடு இணையற்ற நூல் இது. எழுபத்து இரண்டே வரிகளில் விநாயகரின் தத்துவத்தையும் அவர் அருளிச்செய்யும் பாங்கையும் விபரமாக விவரிக்கிறது.
தினமும் இதனைப் பாராயணம் செய்வோருக்கு கணநாதனின் அருளால், ஜாதகத்தில் கிரகங்களால் காட்டப்படும் கர்மவினைகள் காரணமாக வரும் காரியத்தடைகள் நீங்கும் என்பதில் ஐயமில்லை.
இப்பாடலின் வரிகளையும், உரையையும் காண விரும்புபவர்கள், இந்த இணைய முகவரிக்கு செல்லலாம் - https://lampofsurrender.blogspot.com/...
குறிப்பு: இந்த சேனலில் எந்த பாடலிலும், சேனல் உரிமையாளரால், எந்த ஒரு விளம்பரமும் செய்யப்படுவதில்லை. ஆனால், பாடல் ஆடியோவின் காப்பிரைட் உரிமையாளர்களால் போடப்படும் விளம்பரங்களைத் தடுக்கும் உரிமை, சேனல் உரிமையாளருக்கு இல்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
By Jothida Deepam in arrangement with umasreedasan.