Published On Apr 22, 2024
தருமையாதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளிய
'சொக்கநாத வெண்பா'.
பாடல் : 13, 14 மற்றும் 15.
திருச்சிற்றம்பலம்.
காயமோ காலன் கருத்தோ மகாகாலன்
ஞாயமோ சற்று நடப்பதில்லை - பேயனேன்
மாளுவனோ தென்மதுரை மாமணியே யென்னையுகந்
தாளுவையோ சொக்கநா தா.
எரிசுடுவ தல்லா லிரும்பு சுடுமோ
வரியயற்கும் வாசவற்கு மியார்க்கும் - பெரியவர்க்கும்
பூணுமே தத்தொழினின் பொன்னருளாற் றென்மதுரை
தாணுவே சொக்கநா தா.
ஆரிடத்தில் வந்து மடியே னுளத்திருந்து
மோரிடத்தி லுற்பவித்து முள்ளபடி - பாரிடத்தி
னாயே னுளமகிழ நன்றா வுணர்த்திடுவாய்
தாயேநீ சொக்கநா தா.
திருச்சிற்றம்பலம்.